தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளில் 2,004 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுக்கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.
நடப்பு கல்வியாண்டு (2023-24)மாணவர் சேர்க்கை இணையதளவிண்ணப்பப் பதிவு கடந்த மே 15-ம்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்
You do not have permission to view link please Log in or Register
என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்படி பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.