Welcome To DailyEducation

DailyEducation is an open-source platform for educational updates and sharing knowledge with the World of Everyday students.

School Morning Prayer Activities - 10.01.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2024





திருக்குறள்


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை



குறள்:333



அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.



விளக்கம்:



நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.



பழமொழி :

Little strokes fell great oaks



அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்



இரண்டொழுக்க பண்புகள் :



1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :



உண்மையான மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பதே. --செனிக்கா



பொது அறிவு :



திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?



விடை: எமனோ



பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் எது?



விடை: திருநெல்வவேலி



English words & meanings :



gloomy- depressing(இருண்ட). gaunt-skinny(மெலிந்த).



ஆரோக்ய வாழ்வு :



முருங்கை கீரை: ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.



நீதிக்கதை



சிக்கிக் கொண்ட குரங்கு




ஒருமுறை விலங்குகளின் சபையில் ஒரு குரங்கு நடனமாடியது. அதன் நடனத்தில் மகிழ்ந்து போன விலங்குகள் அந்தக் குரங்கைத் தமது அரசனாக ஏற்றுக் கொண்டன.'



ஒரு நரி அந்தக் குரங்கின் மீது பொறாமை கொண்டது. எப்படியாவது அந்தக் குரங்கை மட்டம் தட்ட வேண்டும் என அது விரும்பியது.



ஒரு நாள் அந்த நரி ஒரு வலையில் இறைச்சித் துண்டு இருப்பதைக் கண்டது. குரங்கை அந்த இடத்திற்கு அழைத்து வந்து வலையில் சிக்க வைக்கத் திட்டம் போட்டது.



அது குரங்கிடம் வந்து, "அரசே, வணக்கம். ஓரிடத்தில் ஒரு புதையல் இருப்பதைப் பார்த்தேன். அது நமது அரசுக்குச் சொந்தம் என்பதால் நான் அதைத் தொடவே இல்லை. அரசரான தாங்கள் வந்து அதை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று பவ்வியமாகச் சொன்னது.



மிகக் கம்பீரமாகக் கிளம்பிய குரங்கு முன் எச்சரிக்கை இல்லாமல் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. நரி தன்னை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகப் புலம்பியது.



அதற்கு நரி, இப்படி முன்பின் யோசனை செய்யத் தெரியாத புத்தி இல்லாத நீயெல்லாம் விலங்குகளின் அரசனாக்கும். அரசனைப் பார் அரசனை எனக் கேலி பேசியது.



நீதி : "நுண்ணிய கருமமும் எண்ணித் துணி" என்ற ஒளவையார் கூற்றுப்படி ''சிறிய காரியமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையோடு செய்ய வேண்டும்."



இன்றைய செய்திகள் - 10.01.2024



*லண்டனில் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதை உடன் உற்சாக வரவேற்பு.



*முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நான்கு மாதங்களுக்கு ஒத்திவைப்பு.



*உலக தரத்தில் பிரம்மாண்ட ஜல்லிகட்டு போட்டி: அமைச்சர் எ. வ. வேலு.



*தொடர்மழை! திண்டுக்கல் மாவட்டத்தில் 39.2 செ.மீ மழை பதிவு.



* ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவு.



*மலேசியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி.



Today's Headlines



*Rajnath Singh was happily welcomed with military honors in London.



* Postponement of NEET examination for postgraduate medical courses by four months.



* Jallikattu competition in World-class level: Minister A. W. Velu.



* Continuous rain! Dindigul district recorded 39.2 cm rainfall.



* Another 6 Richter scale magnitude of earthquake recorded in Japan.



*India's Srikanth Kidambi wins first round of Malaysia Open Badminton.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Back
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock