தமிழக அரசு சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில், ஓவிய போட்டியில், மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலை பள்ளி மாணவன் ஹரிசுதன் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.மாணவனுக்கும், மாவட்ட அளவிலான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, உடுமலை துாரிகை கலைக்கூடம் சார்பில் நடந்தது. உடுமலை தனியார் நுாற்பாலை நிறுவன இயக்குனர் குருசாமி, நல்லாசிரியர் தர்மலிங்கம், துாரிகை கலைக்கூட இயக்குனர் பூமுத்துக்குமாரி, கருத்தோவியன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.